Monday, December 18, 2017

How Lanka

புதைக்கப்பட்ட தங்க நகைகளை தோண்டிய முன்னாள் போராளி கைது


முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்ட தங்க நகைகளை தோண்டிய முன்னாள் போராளி உட்பட மூவரை புதுகுடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளும் பெகோ இயந்திரமும் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியின் விஸ்வமடு பிரதேசத்தில் யுத்தக் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்க நகைகளை பெகோ இயந்திரத்தின் உதவியுடன் முன்னாள் போராளி உட்பட மூவர் தோண்டியுள்ளனர்.

பெகோ இயந்திரத்தின் உரிமையாளர் பெகோ இயந்திரத்தை காணவில்லை என பொலிஸில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 70 லட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளும் பெகோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ராசரத்ணம் கார்பதி வர்ணன் 22 வயதுடைய நவரத்தினம் ரூபன் மற்றும் 21 வயதுடை பெருமாள் பிரகாஸ் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புதுகுடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.