Tuesday, January 16, 2018

How Lanka

அமைச்சரவையில் அமளி துமளி!! வெளியேறினார் மைத்திரி

அமைச்சரவையில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை சிரழிப்பதாகவும், பிணை முறி விநியோக மோசடி தொடர்பான ஆணைக்குழு தொடர்பிலும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் தன்னை விமர்சிப்பதாகவும் ஜனாதிபதி, அமைச்சரவை ஆரம்பத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சரவையில் பதற்றம் நிலவியதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியினை பின்தொடர்ந்த பிரதமர், கலந்துரையாடலில் ஈடுபட்டு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் மீண்டும் அமைச்சரவை கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.