Monday, January 22, 2018

How Lanka

இலங்கை பொலிஸ் பிரிவை தூய்மைப்படுத்த பிரித்தானியாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் விஜயம்

இலங்கை பொலிஸ் பிரிவை தூய்மைப்படுத்துவதற்காக பிரித்தானியாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரித்தானிய பொலிஸ் அதிகாரியான ஹியு ஒர்வே என்பவர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

பொலிஸ் சேவையை மீள் திருத்தம் செய்வதற்கான பரிந்துரை சமர்ப்பிக்கும் பொறுப்பு இந்த பிரித்தானிய பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சித்திரவதை தொடர்பில் இலங்கை பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் பொலிஸாரை மக்களுடன் நெருக்கமாக்குவதற்காக பிரித்தானிய அதிகாரி பரிந்துரைகள் சமர்ப்பிக்கவுள்ளார்.