Wednesday, February 28, 2018

How Lanka

கண்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு - தாய்லாந்து பெண்களும் கைது

கண்டியில் அழகுக்கலை நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது தாய்லாந்து பெண் இருவர் மற்றும் இலங்கை பெண்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

நிலையத்தின் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்கள் கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக அழகு கலை மற்றும் மசாஜ் நிலையமாக நடத்தி செல்லப்படும் வீடு தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.