Friday, February 2, 2018

How Lanka

Panoramic முறையில் செவ்வாய் கிரகம்


கடந்த 2011ம் ஆண்டில் செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பப்பட்ட கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் இன்றுவரை அக் கிரகத்தினை ஆராய்ச்சி செய்து வருவதுடன் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றது.

இப்படியிருக்கையில் Panoramic எனப்படும் அகலப் படமாக்கல் முறையில் அற்புதமான படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

குறித்த படங்களை வீடியோ வடிவில் மாற்றி நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை 2011ம் ஆண்டில் குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போதிலும் 2012ம் ஆண்டிலேயே செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 2,000 நாட்களுக்கு அதிகமாக அங்கு தரித்துள்ளது.

இவ் விண்கலத்தினை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.