Saturday, March 17, 2018

How Lanka

அமுல்படுத்தபட்டிருந்த அவசர கால சட்டம் நீக்கம்

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்று இரவு நாடு திரும்பிய ஜனாதிபதி உடனடியாக அவசரகால சட்டத்தை நீக்கும் வகையில் வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார்.

அண்மையில் கண்டியில் ஏற்பட்ட இன வன்முறை சம்பவங்களை அடுத்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.