Wednesday, March 21, 2018

How Lanka

தினேஷ் கார்த்திக்கை பாராட்டமல் இருந்த முரளி விஜய் - முன்னாள் மனைவி விவகாரம் காரணம்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது வெற்றி தேடித் தந்த தினேஷ் கார்த்திக்கை, சக வீரர் முரளி பாராட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவை என்ற போது, சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.

இதனால் அவரை மற்ற வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர், மருத்துவர், செயலாளர் என்று அனைவரும் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி என்று பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் மட்டும் பாராட்டு தெரிவிக்காதது வருத்தமளிக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் உட்பட பலரும் கூறி வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக்கின் முன்னாள் மனைவி நிகிதாவை முரளி விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் இருவருக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. இதன் காரணமாக முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கை பாராட்டாதது வறுத்தமளிப்பதாக உள்ளது எனவும் உலகமே பாராட்டி வரும் ஒரு வீரரை தனிப்பட்ட விரோதத்திற்காக பாராட்ட மனமில்லாத முரள் விஜய்க்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

முரளிவிஜயும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.