Wednesday, March 21, 2018

How Lanka

பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை தரும் புதிய சிகிச்சை

முதுமையினால் கண் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் கண் பார்வை தரும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

முதுமையினால் கண் தசைகளில் பலவீனம் ஏற்படுகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் கண் பார்வையை இழக்கின்றனர். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. தசைகளின் வலிமை குறைவதால் கண் பார்வைக்கு முக்கியமான மாகுலார் பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்களால் படிக்கவோ, வாகனங்கள் ஓட்டவோ முடிவதில்லை.

இந்நிலையில், இந்த பிரச்சினையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில்,

உடல் உறுப்புகள் மீண்டும் வளர்வதற்கு முக்கிய காரணம் ஸ்டெம் செல்கள்( தண்டு உயிரணுக்கள்) ஆகும். இவை பாதிக்கப்பட்ட உறுப்புகளில் புதிய செல்களை உருவாக்கும் திறன் கொண்டது.

இந்த செல்கள் மூலம் கண் பார்வையை மீண்டும் பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கண் பார்வை இழந்தவர்களின் கண்ணில் உள்ள ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ என்ற செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் மூலம் ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ செல்களை மீண்டும் வளரச் செய்ய முடியும். அச்செல்களை வளர்த்து அதனை நோயாளியின் கண்களில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினால் மீண்டும் கண் பார்வை பெறலாம்.

என கூறப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை இரண்டு நோயாளிகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு கண்பார்வை திரும்பக் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.