Wednesday, March 28, 2018

How Lanka

மத்திய வங்கி மீண்டும் நிதியமைச்சின் கீழ்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கி மீண்டும் நிதியமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமரின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கியை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

அரசியலமைப்புச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.