Saturday, April 14, 2018

How Lanka

புதுவருடத்தில் விபத்து - 7 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் இன்று மதியம் 12 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் திடீர் விபத்து காரணமாக 197 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்கமுவ – மீரிகம வீதி மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நீர்கொழும்பு , எகலியாகொடை, வெலிமடை, மிகிந்தலை, ஹூங்கம மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.