Friday, April 13, 2018

How Lanka

விதிமுறைகளை மீறிய இந்திய வீரர்கள் இருவர் வௌியேற்றம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகி, நடைபெற்று வருகின்றன.

இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 218 வீர, வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்கள் Gold Coast விளையாட்டு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்ஃபான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக பொதுநலவாய போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. விளையாட்டு கிராமத்தில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பொதுநலவாய போட்டியில் No-needle Policy விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் எழுவது இது இரண்டாவது முறையாகும்.

பொதுநலவாய போட்டிகளின் ஆரம்ப நாளின் போது, இந்திய குத்துச்சண்டை அணியின் மருத்துவர், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை என கண்டனத்திற்குள்ளானார்.