Saturday, April 28, 2018

How Lanka

பெண்களுக்கான பழு தூக்கும் (ஜுடோ) போட்டியில் பதக்கம் வென்ற பெண் பொலிஸ்

தெற்காசிய வலய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான பழு தூக்கும் (ஜுடோ) போட்டியில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பெண் உத்தியோகத்தரான வாசனா சந்தமாலி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.


63 கிலோ எடைக்கொண்ட பழுத்தூக்கி இவர் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இலங்கைக்கும், இலங்கை பொலிஸூக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று கம்பளை நகரில் நடைபெற்றது. இதன்போது வாகன பேரணியாக அழைத்து வரப்பட்ட இவரை மக்கள் ஆரவராத்துடன் வரவேற்றனர்.


இதில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.யாப்பா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கம்பளை பிரதேச செயலாளர், கம்பளை நகர சபை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.