Monday, May 14, 2018

How Lanka

இன்னமும் இளம் வயதினர் போன்று செயற்பாடும் இலங்கை பாட்டி

வயதாகினால் உடலில் வலிமை குறைவடையும் என்ற போதிலும், இன்னமும் இளம் வயதினர் போன்று செயற்பாடும் பாட்டி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் உள்ள சிங்கள கிராமம் ஒன்றில் வாழும் வயோதிப பெண் ஒருவர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

அவர் மரம் ஒன்றில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் சிறுபிள்ளை போன்று நின்று கொண்டே ஊஞ்சல் ஆடுகின்றார்.

அவர் மிகவும் வேகமாக ஊஞ்சல் ஆடும் காட்சியினை அவரது உறவினர்கள் காணொளியாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனை வயதிலும் மிகவும் திடமாக ஊஞ்சல் ஆடும் பாட்டியின் செயற்பாடு பலருக்கு முன்னூதாரணமாக உள்ளதாகவும், நவீன கால இளம் பெண்களினால் கூட இவ்வாறு ஊஞ்சல் ஆட முடியாதென எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.