Thursday, December 27, 2018

How Lanka

மழையுடனான வானிலை நாளையிலிருந்து தற்காலிகமாக சற்று குறைவடையலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் நிலவி வரும் காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து தற்காலிகமாக சற்று குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இரத்தினபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப இரண்டு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது