Sunday, November 6, 2016

How Lanka

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி ஊழியர் பலி

கெக்கிராவை நகரத்தில் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு கம்பத்தில் திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊழியருக்கு மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில் கெக்கிராவ வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 34 வயது மதிக்கத்தக்க மின்சார சபை ஊழியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.