Saturday, July 1, 2017

How Lanka

மலையக பட்டதாரிகளுக்கு ஜூலை 6இல் நியமனம்

பெருந்தோட்டதுறை பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 6 ம் திகதி காலை 9.00 மணிக்கு கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் என மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற இலங்கை தபாற் சேவை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வுக்கான அழைப்புக் கடிதங்களை அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்ப்பட்டன.

எனவே தற்போது இந்நியமனக் கடிதங்களை பெறவிருப்போரின் பெயர் விபரங்கள் மாகாண கல்வி அமைச்சின் இணையத் தளத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கண்டி கெட்டம்பேயில் அமைந்துள்ள மாகாண தமிழ் கல்வி அமைச்சிலும் பல்லேகலை பிரதான அமைச்சிலும் பெயர்ப் பட்டியல் 3ம் திகதி திங்கட்கிழமை காலை முதல் காட்சி படுத்தப்படுமெனவும் நியமனங்களை பெறயிருக்கும் பட்டதாரிகள் 06.07.2017 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு பல்லேகலை பிரதான அமைச்சிக்கு வருகை தர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.