Tuesday, September 5, 2017

How Lanka

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்


நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் நாளை புதன்­கி­ழமை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
கல்வி பொதுத்­த­ரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டு பணி­க­ளுக்­காக முழு­மை­யாக பயன்­ப­டுத்­தப்­படும் ஐந்து பாட­சா­லைகள் மாத்­திரம் எதிர்­வரும் 21 ஆம் திகதி மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி செயற்­ப­ாடு­க­ளுக்­காக திறக்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் முஸ்லிம் பாட­சா­லைகள் அனைத்தும் எதிர்­வரும் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவ­ணைக்­காக திறக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லை­க­ளுக்கு இரண்டாம் தவ­ணைக்­கான கல்வி செயற்­பா­டுகள் அனைத்தும் நிறைவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விடு­மு­றை­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.
அவ்­வாறு விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்தசகல அரச பாட­சா­லை­களும் மூன் றாம் தவணை கல்வி செயற்­பா­டு­க­ளுக்­காக நாளை 6 ஆம் திகதி மீண்டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.
இதே­வேளை கல்வி பொதுத்தரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்­சை­களின் விடைத்தாள் திருத்­தப்­ப­ணிகள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்­பெ­ற­வுள்­ளன. இதற்­காக நாட­ளா­விய ரீதியில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள 5 பாட­சா­லைகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்ள நிலையில் 22 பாட­சா­லைகள் பகு­தி­ய­ள­விலும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.
இதற்­க­மைய, கொழும்பு ரோயல் கல்­லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்­லூரி, கண்டி விஹா­ர­ம­கா­தேவி மகளிர் பாட­சாலை, கண்டி ஸ்வர்­ண­மாலி மகளிர் பாட­சாலை மற்றும் கண்டி சீத்­தா­தேவி கல்­லூரி ஆகிய பாட­சா­லைகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்­ளன. குறித்த பாட­சா­லைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்­பா­டு­க­ளுக்­காக இம்­மாதம் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இதேவேளை இரண்டாம் தவணைக் காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.