Thursday, December 28, 2017

How Lanka

சமோசா விற்க அப்லை பண்ணிய பொறியியல் படித்த மாணவர்கள்

வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் பெரிய பிரச்சனையாக உள்ளது.

பணிபுரிய விருப்பமும், உடற் தகுதி, கல்வி தகுதி, திறமை போன்றவை இருந்தும் வேலை கிடைக்காத நிலையே வேலை கிடைக்காமல் அலைபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், நான்கு மணி நேரம் சமோசா விற்க ஆட்கள் தேவை என்று குறிப்பிட்டு சம்பளம் 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை என்று அச்சிடப்பட விளம்பர சுவரொட்டியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிறது.

இதற்கு நாங்களும் விணப்பிக்கலாமா என்று பொறியியல் படித்த மாணவர்கள் கேட்பது வேலையில்லா திண்டாட்டத்தின் உக்கிர நிலையை காண்பிக்கிறது.