Saturday, January 27, 2018

How Lanka

கைகளில் மருதானி அலங்காரத்தை விரும்பும் வெளிநாட்டுப் பெண்கள்

நோர்வே நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ள சில பெண்கள் ஆசையுடன் தமது கைகளில் மருதாணி அலங்காரத்தை இட்டுள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

9ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்தது.

இந்த வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட குறித்த வெளிநாட்டு பெண்கள் மருதாணி அலங்காரம் இடும் காட்சியறை பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது மருதாணி அலங்காரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அவர்கள் ஆசையுடன் தமது கைகளிலும் குறித்த அலங்காரத்தை இட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த சில காலங்களாக தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும், தமிழர் பாரம்பரியத்தின் மீதும் வெளிநாட்டு பெண்களின் கவனம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.