Wednesday, January 31, 2018

How Lanka

இந்தியாவுடனான ஒருநாள் போட்டி அனல் பறக்கும் - டுமினி

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் வென்று கைப்பற்றியுள்ளது.

டிராவிட், டோனி தலைமைக்கு பின்னர் தென் ஆப்பிரிககாவில் கோஹ்லி தலைமையிலான அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டுமினி கூறுகையில், இந்தியா, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நன்றாக விளையாடி வருவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தென் ஆப்பிரிக்காவிலும் அப்படியே விளையாடியுள்ளனர்.

டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தபோதும், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரும் 20 ஓவர் தொடரும் மிகவும் சவால் நிறைந்ததாகவும், பரபரப்பு பஞ்சம் இருக்காது எனவும் கூறியுள்ளார்.