Monday, January 8, 2018

How Lanka

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய அதிபர் நியமனத்தை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பில் அறிவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியை தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் நாம் முயற்சித்த போதும் அவை பயனளிக்கவில்லை.