Friday, February 9, 2018

How Lanka

சொந்த முகவரி இல்லா பத்து லட்சம் பேர் இலங்கையில்

சொந்த முகவரி இல்லா பத்து லட்சம் பேர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

தொழில் புரிட்சி மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பெருந்தோட்ட பகுதிகளில் ஐந்து லட்சம் பேரும், நகர்ப் புறத்தில் ஐந்து லட்சம் பேரும் இவ்வாறு முகவரியின்றி வாழ்ந்து வருகின்றனர்.

நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களுக்கு உடனடியாக காணிகளை வழங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது எனவும் காணி அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.