Tuesday, March 6, 2018

How Lanka

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளைய தினங்கள் விடுமுறை

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளைய தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியின் திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளை காலை 6.00 மணி வரையில் கண்டி மாவட்டத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டப் பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளைய தினங்கள் விடுமுறை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.