Monday, April 23, 2018

How Lanka

சிலாபம் - மாரவல ஏரியிலுள்ள அனைத்து மீன்களும் திடீரென உயிரிழந்துள்ளன

சிலாபத்தில் உள்ள ஏரி ஒன்றில் திடீரென மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிலாபம் - மாரவல ஏரியிலுள்ள அனைத்து மீன்களும் திடீரென உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக சுமார் ஒன்றரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மீன்வர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

21ஆம் திகதியில் இருந்து மீன் உயிரிழந்து மிதக்க ஆரம்பித்துள்ள நிலையில் இன்றைய தினம் அனைத்து மீன்களும் உயிரிழந்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள மீனவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து இலட்சம் ரூபாவை முதலீட்டு மீன்களை வளர்த்து வந்துள்ளனர்.

ஏரியில் விஷம் கலந்த நிலையில் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.