Monday, April 9, 2018

How Lanka

விடுதலைப் புலிகளின் எறிகணைகளை பார்து ஆச்சரியப்பட்ட அதிரடிப்படையினர்

29 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட ஏறிகணைகள் தொடர்பில் அதிரடிப்படையினர் இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆய்வு செய்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்களை, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அதிரடிப்படையினர் இன்று மீட்டுள்ளனர்.

இதில் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட தமிழன் குண்டுகள் மற்றும் அருள் 89 ஏரிகனைகளும் மீட்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் எதிர்த்தாக்குதல்களை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் இயக்கம் தமது சொந்த முயற்சியில் அருள் 89 எனும் எறிகணைகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்.

பின்னர் இலங்கை இராணுவத்தினருடனான பல்வேறு சமர்க்களங்களில் இந்த எறிகணைகளை விடுதலைப் புலிகளுக்கு பக்கபலமாக இருந்துள்ளது.

குறித்த அருள் என்னும் பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வீரமரணமடைந்த மாவீரர் ஒருவரின் பெயர் என்றும், 89 என்னும் இலக்கம் ஆண்டை குறிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.