Thursday, May 17, 2018

How Lanka

கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொட்டும் மழையிலும் இரவு இரவாக நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் நீண்ட காலமாக வறட்சி நிலவி வந்த நிலையில் நேற்று அடை மழை பெய்துள்ளது.


இந்த நிலையில் இன்றைய தினம் அனுஸ்டிக்க உள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்று இரவு ஏற்பாடுகள் முன்னெக்கப்பட்டுள்ளது.
மழை என்றும் பாராமல் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் வகையில் இந்த பகுதி இளைஞர்களும், மக்களும் செயற்பட்டு வந்துள்ளனர்.