Sunday, May 27, 2018

How Lanka

ஐபிஎல் கிண்ணத்தை வீரர்களிடம் கொடுத்துவிட்டு.. டோனி செய்த ஆச்சரியம்

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது கிண்ணத்தை வீரர்களிடம் கொடுத்துவிட்டு, டோனி தன் மகளுடன் விளையாடியது பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் மீண்டு வந்த சென்னை அணி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

அதே போன்று சென்னை அணியும், இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பின், ஐபிஎல் தொடருக்கான கிண்ணம் சென்னை அணியின் தலைவரான டோனியிடம் கொடுக்கப்பட்டது.

அப்போது கிண்ணத்தை வாங்கிய டோனி, சக சென்னை அணி வீரர்களிடம் கொடுத்துவிட்டு, தன் மகள் ஜீவாவிடம் விளையாடிக் கொண்டிருந்தார்.

இத்தனை நாட்கள் பாடுபட்டது எல்லாம், இந்த கிண்ணத்திற்காக தான், மற்ற வீரர்கள் எல்லோரும் கிண்ணத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, டோனி மட்டுமி தன் மகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார்.