Monday, May 28, 2018

How Lanka

இன்று முதல் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் புகையிரத தொழில்நுட்ப சேவை

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தலைவர் பீ.சம்பத் ராஜித கூறியுள்ளார்.

மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் 12,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதுடன். அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.