Friday, June 8, 2018

How Lanka

தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சி இளைஞன் உயிரிழந்துள்ளார்

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாமரை கோபுரத்தின் லிப்டில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோபுர நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்ட 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லிப்டில் இருந்து எவ்வாறு விழுந்தார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

இந்த அனர்த்தம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.