Thursday, July 5, 2018

How Lanka

இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட 220 கிலோ தங்கத்திற்கு நடந்தது என்ன

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீட்கப்பட்ட 220 கிலோ கிராம் தங்கம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “யுத்தம் முடிவடைந்த பின்னர் மீட்கப்பட்ட தங்கத்திற்கு என்ன நடந்தது என்பதில் சந்தேகம் இருக்கின்றது.

இராணுவ தளபதியாக பதவி வகித்த போது மீட்கப்பட்ட 220 கிலோ தங்கத்தை சட்டமுறைமைகளுக்கு அமைய வவுனியா பொலிஸாரிடம் கையளித்திருந்தேன்.

எனினும், தான் ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் அவை அனைத்தும் ஜனாதிபதி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதற்கு பின்னரான நடவடிக்கைகளை பாதுபாப்பு அமைச்சே மேற்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், 220 கிலோ தங்கத்திற்கும் என்ன நடந்தது என்று தெரிவிக்காது தற்போது மௌனம் காத்து வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.