Friday, October 6, 2017

How Lanka

என்னையா நடக்குது இந்த உலகத்தில ஒரே நேரத்தில் தாயும் மகளும் குழந்தையை பிரசவித்தனர்


துருக்கியில் உள்ள மருத்துவமனையில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய துருக்கியின், கோனியா பகுதியைச் சேர்ந்த பாத்திமா பிரின்சி (42), அவரது மகள் காதா பிரின்சி (21) ஆகிய இருவரும் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது உலகிலேயே இதுதான் முதன்முறை எனவும் மருத்துவத்துறையில் இதுவொரு அதிசயம் எனவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் பெயர் சூட்டியுள்ளார்.

தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தவர்கள் பாத்திமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் என்பது குறிப்பிடத்தக்கது