Friday, January 12, 2018

How Lanka

பொதுமக்களை ஏமாற்றி - அதிகளவு பணம் பறிப்பு

புனர்வாழ்வு அமைச்சிலிருந்து கதைக்கின்றோம் என அலைபேசியில் கதைக்கும் நபர்கள், பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சம்பவங்கள் தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த 2000ஆம் ஆண்டு இடம்­பெற்ற போர் அனர்த்தம் காரணமாக சொத்துக்களை இழந்தவர்கள் இழப்பீடு கோரி புனர்வாழ்வு அமைச்சுக்கு விண் ணப்பித்து 15 வருடங்களாகின்றன.

எனி­னும் இது­வரை பிர­தே­சத்­தைச் சேர்ந்த பல­ருக்கு இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு கிடைக்­க­வில்­லை.

இந்­த­நி­லை­யில் அதனைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி இது­வரை கொடுப்­ப­னவு கிடைக்­கா­த­வர்­க­ளுக்கு அலை­பே­சி­யில் தொடர்பை ஏற்­ப­டுத்­தும் சில விஷ­மி­கள் தாம், ‘‘கொழும்பு புனர்­வாழ்வு அதி­கார சபை­யி­லி­ருந்து கதைக்­கின்­றோம்.

தங்­க­ளுக்கான இழப்­பீட்­டுத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மேல­திக விவ­ரங்­களை வேறொரு அலு­வ­ல­ரு­டன் கதை­யுங்­கள்’ எனக் கூறி மற்­றொரு அலை­பேசி இலக்­கத்தை வழங்குகின்றனர்.

மக்கள் அந்த இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு கதைத்­துள்­ள­னர். அதன்­போது, ‘‘இழப்­பீட்­டுக்­கான காசோலை தயா­ராக உள்­ளது.

விரை­வில் அனுப்­பு­வ­தா­யின் குறித்த இலக்­கத்­துக்கு 19 ஆயி­ரத்து 500 ரூபா ஈசி காஷ் மூலம் அனுப்பி வைக்க வேண்­டும்.

பணம் கிடைத்­த­தும் தங்­க­ளது இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு தங்­க­ளது முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கப்­ப­டும்’ என குறித்த இலக்கமுடைய நபர் கூறி­யுள்­ளார்.

அதன் பிர­கா­ரம் காசு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அனுப்பி ஒரு வாரத்­துக்கு மேலா­கி­யும் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு கிடைக்­கா­த­தால் மீண்­டும் குறித்த நப­ரு­டன் தொடர்பு கொண்­ட­போது அலை­பேசி இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போர் இடரின் போது பிர­தே­சத்­தைச் சேர்ந்த அரச பணி­யா­ளர்­கள், ஓய்­வூ­தி­யர்­கள், வணி­கர்­கள், வெளி­நாட்­டில் வதி­வோ­ரின் குடும்­பங்­கள், வாக­னங்­கள் வைத்­தி­ருந்­தோர் என ‘உ’ பங்­கீட்டு வைத்­தி­ருந்த 5 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் போர் அனர்த்­தத்­தில் ஏற்­பட்ட சொத்­த­ழி­வுக்கு இழப்­பீடு கோரி பிர­தேச செய­ல­கம் ஊடாக புனர்­வாழ்வு அமைச்­சுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர்.

விண்­ணப்­பித்­த­வர் க­ளுக்கு அமைச்சால் இலக்­கம் வழங்­கப்­பட்டு தொடர் இலக்­கம் மூலம் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலையில் கடந்த அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் கிளி­நொச்­சி­யில் வைத்து அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச­வால் ஒரு தொகு­தி­யி­ன­ருக்கு இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டது.

அதன்­பின்­னர் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­த­ நி­லை­யில் இழப்­பீடு வழங்­கா­த­வர்­க­ளின் பெயர் விவ­ரங் களை அறிந்­துள்ள சிலரே மக்­களை இவ்­வாறு ஏமாற்றிப் பணம் பறித்து வரு­ கின்­ற­னர் என விசனம் தெரிவிக்கப்பட்டது.