Saturday, June 2, 2018

How Lanka

பிள்ளையாரையும் விட்டுவைக்காத மனித இனம்

யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரகத்திற்கு நாணயத்தாளினால் அலங்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது.

இலங்கையில் பாவனையில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை நாணயத்தாள்களைச் சேதமாக்குவது குற்றம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த அலங்கார படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.