Monday, December 17, 2018

How Lanka

மானிப்பாயில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஆவா குழுவை சேர்ந்த 11 சந்தேகநபர்கள் கைது

யாழில் ஆவா குழுவை சேர்ந்த 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரில் இருவர் ஆவா குழுவின் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் என்பதுடன், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் வானிலும், மோட்டார் சைக்கிளிலும் பயணித்த போது 6 வாள்களு.
கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் 11 பேரையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.